ஏகாத்மதா ஸ்தோத்திரம்

இந்து அனைவரும் சோதரரே, இந்து எவருமே தாழ்ந்தவராகார்,இந்துவை காப்பது என்விரதம்,சரிசமானமே எனது மந்திரம்... சரிசமானமே எனது மந்திரம்....

Friday, March 2, 2012

தமிழரும், உணவும் - ஓர் பார்வை!


ஒரு சமூகத்தின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் போன்ற வாழ்வியல் கூறுகளை தீர்மானிக்கும் காரணிகளில் அவர்கள் உட்கொள்ளும் உணவு முதன்மையானது என்றால் அது மிகையில்லை. ஏனெனில் மனிதன் தான் வாழும் பருவச் சூழலில் இயற்கையாய் அமைந்திருக்கும் வசதி வாய்ப்புகளைக் கொண்டே தனக்கான உணவினை உருவாக்கிக் கொள்கிறான். 
இந்த வகையில் உலகின் ஒவ்வொரு பகுதில் வாழ்ந்த இனக்குழுக்கள் தான் வாழும் சூழலுக்கு ஏற்ப தனித்துவமான அடையாளங்களை கொண்டே வளர்ந்தன, இன்னமும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் நாம் அனைவரும் அறிந்தவையே. 
மனிதன் தொல் பழங்குடி இனக் குழுவாய் வாழ்ந்த காலத்தில், கிடைத்ததை உண்டு, கிடைத்ததை உடுத்தி, கிடைத்த இடங்களில் உறைந்து வாழ்ந்தவன். சற்றே மேம்பட்டு ஆற்றங்கரை நாகரிகமாய், நில உடமைச் சமூகமாய் வாழத் துவங்கிய பின்னரே தனக்கான உணவை உருவாக்கிடவும், பாதுகாக்கவும் கற்றுக் கொண்டார்கள். நெருப்பின் பயன் பாடு உணரப் பட்ட பின்னரே உணவை பதப் படுத்தவும், சமைக்கவும் ஆரம்பித்தனர்.
இந்த வகையில் ஆறாயிரம் ஆண்டு பழமையான தமிழரின் உணவியல் வரலாற்றினை அலசுவதே இந்தத் தொடரின் நோக்கம். இங்கே நான் பகிர இருக்கும் பெரும் பாலான இந்த தகவல்கள் பழந்தமிழ் பாடல்களின் ஊடே சேகரிக்கப் பட்டவை. ஆறாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழர்களின் வரலாற்றில், கடைசி ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளின் தகவல்கள் மட்டுமே இந்த பாடல்களின் மூலம் நமக்குக் கிடைக்கிறது.
அதற்கு முந்தைய வரலாறுகள் எல்லாமே கல்வெட்டுக்கள், சாசனங்கள் மற்றும் செவிவழிச் செய்தியாகவும், ஊகங்களின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட செய்திகளே. இவற்றில் உணவியல் தொடர்பான தகவல்கள் குறைவாக இருந்தாலும் அவை சுவாரசியமானவை.
ஆதியில் தமிழனும் உணவிற்காக விலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சியை பச்சையாகவும், காய வைத்தும், சுட்டும், சமைத்தும் உண்டதாக, புறநானூறு மற்றும் பெரும்பாணாற்றுப் படை போன்ற நூல்களில் அநேகக் குறிப்புகள் காணக் கிடைக்கிறது. அவற்றை ஒவ்வொன்றாக விளக்கப் புகுந்தால் தொடரின் நீளம் அதிகரிக்கும் என்பதால் இங்கே பாடல் குறிப்புகளை தவிர்த்திருக்கிறேன்.
ஒரு பக்கம் வேட்டைச் சமூகமாய் வாழத்துவங்கிய வேளையில், சமவெளிப் பகுதிகளில் உணவிற்காக கால்நடைகளை வளர்க்கவும் தமிழர்கள்  தலைப்பட்டனர். இந்த காலகட்டத்தில்தான் உணவை உற்பத்தி செய்யவும் அதனை பாதுகாக்கும் முயற்சிகள் ஆரம்பம் ஆகியது. சமையல் செய்யும் முறையும் கூட இந்த கால கட்டத்தில்தான் துவங்கியது எனலாம்.

சமைத்தல் என்றால் என்ன?, தமிழர்கள் எப்படி சமைத்தார்கள்?

விவரம் அடுத்த பதிவில்....

நன்றி சித்தர்கள் இராச்சியம் 

No comments:

Post a Comment