தமிழ்நாட்டில் உள்ள எல்லா பெரிய கோவில்களிலும் ஆண்டுதோறும் உற்சவ காலங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். அப்பொழுது இறைவனையோ இறைவியையோ அலங்கரித்து ஒரு வாகனத்தில் தெருக்கள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். எந்தெந்த சுவாமிக்கு எந்தெந்த நாட்களில் எந்த வாகனம் என்பதை ஆகமங்கள் எடுத்துச் சொல்லுகின்றன.
இந்த வழக்கம் ஒருகாலத்தில் உலகம் முழுதும் இருந்திருக்கிறது. ஆனால் அங்கெல்லாம் அழிந்த பின்னரும் இந்தியாவில் மட்டும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இன்றுவரை நீடித்துவருகிறது. இந்துப் பண்பாடு காலத்தால் அழியாத ஒரு பொக்கிசம்.
வாகனங்கள் ஏன், எப்போது துவங்கின, அவைகளின் உள்ளர்த்தம் என்ன எனபவைகளைப் பார்ப்பதற்கு முன்னால் சில சுவையான விசயங்களை முதலில் காண்போம். எகிப்திலும் பாபிலோனியாவிலும் கூட இந்த வாகனங்கள் இருந்தன. துருக்கி சிரியா, இராக், ஈரான் முதலிய முஸ்லீம் நாடுகளில் ஒரு காலத்தில் இந்து கலாசாரம் இருந்தது. சம்ஸ்கிருத கல்வெட்டுகள் பற்றிய கட்டுரையில் இது பற்றி பார்த்தோம். துருக்கி –சிரியா எல்லைப் பகுதியில் பொகஸ்கோய் என்னும் ஊரில் கண்டு பிடிக்கப்பட்ட களிமண் படிவ கல்வெட்டில் வேதகால தெய்வங்களின் பெயர்கள் இருக்கின்றன.
காலக் கணக்கீட்டின்படி பார்த்தால், இந்தியாவுக்கும் முன்னதாக சுமேரிய, பாபிலோனிய,எகிப்திய ,கிரேக்க பண்பாட்டில் முதலில் வாகனங்களைக் காண்கிறோம். ஆக, அங்கிருந்து இவை இந்தியாவுக்கு வந்தனவா? அல்லது இந்தியர்கள் அதை அங்கு பரப்பினரா என்று கேட்டால் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சொன்ன பதிலையே சொல்லுவேன். கபில+ஆரண்ய= கபிலாரண்யா=கலிபோர்னியா (அமெரிக்கா) என்று ஆனதாகச் சொல்லிவிட்டு உலகம் முழுதுமுள்ள இந்து தடயங்கள் சின்னங்கள் பற்றி குறிப்பிட்டுவிட்டு, இப்படிச் சொல்கிறார்: “உடனே இந்துக்கள் அங்கெல்லாம் போய் இதைப் பரப்பினார்கள் என்று நினைக்காதீர்கள். ஆதியில் உலகம் முழுதும் சநாதன தர்மம் (இந்துமதம்) ஒன்றுதான் இருந்தது” என்று 1935-ஆம் ஆண்டு சென்னை தொடர் சொற்பொழிவில் கூறுகிறார்.
வேதத்தில் பல மிருகங்கள் குறிப்பிடப்படுகின்றன. புராண இதிகாசங்களில் வாகனங்கள் பற்றிய தெளிவான குறிப்புகள் இருக்கின்றன. சிந்து சமவெளியில் ஒரு முத்திரையில் யானை மீது ஒரு ஆணோ பெண்ணோ நிற்கும் காட்சி இருக்கிறது. இதைப் பற்றி யானை வாகனத்தில் இந்திரன் அல்லது இந்திராணி என்று ஏற்கனவே எழுதி இருக்கிறேன். ஆகவே 5000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் வாகனம் உபயோகத்துக்கு வந்துவிட்டது..கி.மு இரண்டாம் நூற்றாண்டு காசுகளில் மயில்வாகனத்தில் முருகன் காட்சி தருகிறான். இந்தியா, கம்போடியா, இந்தோநேசியா ஆகிய இடங்களில் வாகன சிற்பங்கள் உள்ளன.
Astarte and Hathor
இந்து வாகனங்கள் உலகம் முழுதும் இருந்ததற்கான சான்றுகள் இதோ:
எகிப்தில் துதன்காமுன் (கி.மு. 1333) என்ற மன்னனை கருஞ்சிறுத்தை மீது நிற்பதாகக் காட்டியுள்ளனர். எகிப்திய பாரோக்கள் (மன்னர்கள்) இறைவனுக்குச் சமமாகக் கருதப்பட்டனர். அவனுடைய தாத்தா, கொள்ளுத் தாத்தா காலத்தில் இருந்து இந்துப் பண்பாட்டில் இருந்த தொடர்பு இதற்குக் காரணமாக இருக்கக் கூடும். மிட்டன்னி (சிரியா/துருக்கி/இராக் பகுதியை ஆண்ட இந்து மன்னர்கள்) மன்னர் தசரதன், தன் பெண்களை எகிப்திய மன்னனுக்கு மணம் முத்துவிட்டு எழுதிய கடிதங்கள் இன்றும் எகிப்தில் உள்ளன. துதன்காமுனுக்குப் பின் சேதி என்ற மன்னர் ஓவியங்களிலும் வாகனத்தைப் பார்க்கலாம்.
இந்துக் கடவுள்களில் துர்க்கா தேவி, அய்யப்பன், புத்த மதத்தில் பத்மசம்பவர் ஆகியோர் புலி வாகனத்தில் செல்வதாகக் காட்டப்பட்டிருக்கின்றனர்.
சீம்ம வாகனம்
வாகனங்களில் மிகவும் பழைய வாகனம் சிம்ம வாகனம். இன்றும் துர்கா தேவியின் வாகனமாக பயன்படுத்தப்படுகிறது. எங்கெல்லாம் தேவி, காளி வழிபாடு இருக்கிறதோ அங்கெல்லாம் சிம்ம வாகனம் இருக்கிறது.
கதேஸ் என்று சிரியா நாட்டிலும் ஹதோர் என்று எகிப்திலும் வழிபடப்பட்ட தேவியின் வாகனம் சிங்கம். நிர்வாணமாக நிற்கும் இந்தக் கடவுளின் ஒரு கையில் பாம்பு இருக்கும். இனவிருத்திக்கான தேவதை.
Adad on bull. Indra onVan, and Durga on vahanas
ஹீப்ருக்கள் வணங்கிய லிலித் என்ற தேவதை இரண்டு சிங்கங்களின் மீது நிற்பதாகக் காட்டப்படுகிறது. லிலித், முதல் மனிதன் ஆன ஆதாமின் மற்றொரு மனைவி. ஜில்காமேஷ் கதையிலும் லிலித் வருகிறாள். அவர் தாக்கியவுடன் லிலித் பாலைவனத்துக்குள் ஓடியதாக கதை.
கி.மு.எட்டாம் நூற்றாண்டு சிற்பம் ஒன்று அசீரிய காதல்-போர் அதி தேவதையான இஷ்டாரையும் சிம்ம வாகினியாகக் காட்டுகிறது.
கி.மு 133 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எழிலிகாயாவில் அரின்னா, சுர்ருமா ஆகிய தெய்வங்களும் சிம்ம வாகனத்தில் நிற்கின்றனர்.
காளை வாகனம்
காளையை இந்திரனுக்கும் ஏனைய தெய்வங்களுக்கும் உவமையாகக் கூறுவதை வேதத்தில் படிக்கிறோம். பிற்காலத்தில் காளையை சிவனுக்கு வாகனமாக்கினர்.5500 ஆண்டுகளுக்கு முன் சுமேரியாவில் ஒருகாளை மீது தெய்வம் உட்காரும் ஆசனம் போடப்பட்டிருக்கிறது
கி.மு.எட்டாம் நூற்றாண்டு சிற்பம் ஒன்று புயலுக்கு அதிபதியான பாபிலோனிய அதாத் என்னும் கடவுளை காளை வாகனத்தில் நிற்கும்படி செதுக்கியுள்ளது. அதாத் இந்திரன் போல கையில் வஜ்ராயுத்தை தாங்குகிறார்.
இந்திய வாகனங்களுக்கும் முற்கால வெளிநாட்டு வாகனங்களுக்கும் உள்ள பெரிய வேறுபாடு அந்த கடவுள்கள் வாகனங்கள் மீது நிற்பார்கள். இந்துக் கடவுளோவெனில் வாகனத்தில் அமந்திருப்பார்கள்.
பாபா இயாகா என்ற ஸ்லாவ் இனக் கடவுள் பன்றியின் மீது பயணம் செய்கிறார்.

No comments:
Post a Comment